பெர்னா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டிட்டு தயாரிக்கும் படத்திற்கு ‘அதிரடி வேட்டை’ என்று பெயரிட்டுள்ளனர்.
ஸ்ரீகுமார், ஆர்தன், தினேஷ் பணிக்கர் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ஷில்பா, ரோஷினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு – மோகனன்
இசை – சரவணன்
நடனம் – ராபின்
திரைக்கதை – பாலச்சந்திரன்
எழுத்து, இயக்கம் – அஸ்வின்குமார்
தயாரிப்பு – டிட்டு
படம் பற்றி பேசிய இயக்குநர் அஸ்வின்குமார், “மக்களின் அமோக செல்வாக்கு பெற்ற நடிகர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி மக்கள் பலரும் பலவிதமாக எண்ணி குழம்புகிறார்கள்.
அரசாங்கம் அந்தக் கொலையை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை நியமிக்கிறது. அவர்கள் இந்த வழக்கினை விசாரிக்க, விசாரிக்க அதிலிருந்து பல பூதங்கள் கிளம்புகின்ற.
உண்மையில் என்ன நடந்தது.. அந்த நடிகரை கொலை செய்தது யார் என்பதை திகில் கலந்த சுவாரஸ்யமான வகையில் திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கி சென்னை, ஊட்டி, மும்பை போன்ற இடங்களில் ஒரே கட்டத்தில் நடைபெற்று முடிவடைகிறது…” என்றார்.