பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற பட நிறுவனம் சார்பாக T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘அதிபர்’.
இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் ஆகியோரும் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் டி.சிவகுமாரும் சிபிஐ அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.
மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து,கோவைசரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலி முருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா என்ற திரையுலகப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிலிப்ஸ் விஜயகுமார்
இசை – விக்ரம்செல்வா
பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா
கலை – M.G.சேகர்
நடனம் – சிவசங்கர், தினேஷ்
ஸ்டண்ட் – கனல் கண்ணன்
எடிட்டிங் – சஷிகுமார்,
தயாரிப்பு நிர்வாகம் – அஷ்ரப் – ஹக்கீம்
இணை தயாரிப்பு – P.B. சரவணன்
தயாரிப்பு – T.சிவகுமார்.
எழுத்து இயக்கம் – சூர்யபிரகாஷ்.
படம் பற்றி இயக்குநர் சூர்யபிரகாஷ் பேசும்போது, “படத்தின் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தயாரிப்பாளர் படத்தின் கதைக்கேற்ப செலவு செய்கிறார். சமீபத்தில் மலேசியாவில் ஹீரோ ஜீவன், ஹீரோயின் வித்யா பங்கேற்ற பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
‘என் காதல் தேவதை
எங்கேதான் இருக்கிறாள்
தேடி நான் வருகிறேன் என் காதல் சொல்ல’ என்ற பாடலும்
‘அவளா இவளா
அவளேதான் இவளா
கனவில் வந்த தேவதைதானா
கண்கள் கண்ட தாரகைதானா?’ என்ற பாடலும்
தினேஷ் நடன அமைப்பில் படமாக்கப்பட்டன.
அதோடு ஜீவனுடன் மலேசிய ஸ்டண்ட் கலைஞர்கள் மோதும் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. படத்தின் எல்லா வேலைகளும் முடிவடைந்துவிட்டது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது…” என்றார் இயக்குநர் சூர்யபிரகாஷ்