full screen background image

“விஷயம் தெரிஞ்சா பேசணும்..!” சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அறிவுரை..!

“விஷயம் தெரிஞ்சா பேசணும்..!” சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அறிவுரை..!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தற்போது தெலுங்கு நடிகர் ராணாவுடன் இணைந்து விராட பர்வம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆனது. படத்தில் நக்சலான ராணா டகுபதியை காதலிக்கும் பெண்ணாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார் சாய் பல்லவி. அப்போது, “வன்முறை எழுச்சியை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் சித்தாந்தத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?” என்ற கேள்வி சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சாய் பல்லவி, கடந்த மார்ச் மாதம் வெளியான ‘காஷ்மீர் பைல்ஸ்’ படத்துடன் தொடர்புப்படுத்தி பதில் அளித்தார்.

“காஷ்மீர் பைல்ஸ்’ படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். அது வன்முறை என்றால், சமீபத்தில் பசுவை அழைத்துச் சென்ற இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறுமாறு சொன்னதும் தவறுதான்” என்று குறிப்பிட்டிருந்தார் நடிகை சாய் பல்லவி. மேலும் “இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம்..?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் சாய் பல்லவி.

சாய் பல்லவியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இதனிடையே “காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்கு சமம்” என்று ஒப்பிட்டு பேசிய சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹைத்ராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகையும், முன்னாள் எம்பியுமான விஜயசாந்தியும் சாய் பல்லவியை கண்டித்துள்ளார். இது தொடர்பான தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கும் நடிகை விஜயசாந்தி, “பசுக்கள் கொல்லப்படுவதை கேள்வி எழுப்புவதும், காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்படுவதும் ஒன்றல்ல. நீ கொஞ்சம் சிந்தித்தால் உண்மை புரியும். ஒரு தாய் தன் மகனை தவறு செய்ததற்காக அடிப்பதும், ஒரு திருடனை திருடியதற்காக அடிப்பதும் ஒன்றா? இப்பிரச்சனை குறித்து தெரியாவிட்டால் பேசாமல் இருப்பதே சிறந்தது…” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Our Score