full screen background image

ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு..!

ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு..!

ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக சேர்வதற்கு உலகம் முழுவதிலும் திரைத்துறையைச் சேர்ந்த 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இதில் நமது தமிழ் நடிகர் சூர்யாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக புகழ் பெற்ற ஒன்று. பலகாலமாக இந்த விருதை பெற தமிழ் சினிமா முயற்சி செய்து வருகிறது.

கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று’ படம் ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று’ இருந்தது, ஆனால் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகவில்லை.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராகச் சேர்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மொத்தம் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த 397 பேரில் தமிழ் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், “தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும், சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக @ThaAcademy விருது தேர்வுக் குழுவில் இடம் பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். வானமே எல்லை..” என்று குறிப்பிட்டுள்ளார்.

Our Score