full screen background image

“சினிமா பொழுதுபோக்கும் இல்லை; கலையும் இல்லை..” – நடிகர் ஜெயம் ரவியின் கருத்து..!

“சினிமா பொழுதுபோக்கும் இல்லை; கலையும் இல்லை..” – நடிகர் ஜெயம் ரவியின் கருத்து..!

‘தற்காப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயம் ரவியும் கலந்து கொண்டு பேசினார்.

tharkkaapu-audio-launch-stills-021

அவர் பேசும்போது, “என் பழைய நண்பர்களில் சக்தியும் ஒருவர். என் அப்பாவும் சுலபமாகப் பாராட்டமாட்டார். ‘நடிக்கும்போது சுற்றிலும் இருக்கிற 40 பேரை மனதில் வைத்து நடிக்காதே.. தியேட்டரில் இருக்கிற பல கோடி பேருக்காக நடி…’ என்பார்.

என் படங்களைப் பார்த்து விட்டு ‘அது சரியில்லை; இது சரியில்லை’ என்று குறையாகவே சொல்வார். ‘சரியில்லாத எல்லாவற்றையும் தூக்கிவிடலாம்…’ என்பார். ‘அப்போ எது சரின்னாவது சொல்லுங்கப்பா..?’ என்பேன்.  அதற்கு அவர், ‘கெட்டதை எல்லாம் எடுத்துவிட்டால் மீதி எல்லாம் நல்லதுதானே..?’ என்பார்.

‘தற்காப்பு’ நல்ல தலைப்பு. இப்போதெல்லாம் நிறைய பேர் தற்காப்புக்காக மட்டுமே படம் எடுக்கிறார்கள். நாலு பாட்டு, நாலு பைட்டு, கதை சுமாரா இருந்தால் போதும் என்று படம் எடுக்கிறார்கள்.  அப்படித் தற்காப்புக்காகப் படம் எடுக்காதீர்கள். நானும் அப்படித் தற்காப்புக்காக சில படங்களில் நடித்திருக்கிறேன். 

சினிமா பொழுதுபோக்கும் இல்லை. கலையும் இல்லை. பார்ப்பவரை கட்டிப் போட வேண்டும். அது போதும்.

மூன்றாண்டுகளாக எடுத்த படம் ‘தனி ஒருவன்’. அப்போது ‘என்ன ஸார்.. மூணு வருஷமா  படமே இல்லையே..?’ என்றார்கள். இந்த ஒரே ஆண்டில் மூன்று படங்களைக் கொடுத்தேன். ‘என்ன சார்.. ஒரே வருஷத்துல மூணு படம்…?’ என்கிறார்கள். மற்றவர் பேசுவதைப் பற்றி கவலைப்படாமல் உழைக்க வேண்டும்.. பலன் நிச்சயம் உண்டு. உதாரணம் என் ‘தனி ஒருவனின்’ வெற்றி..” என்றார்.

Our Score