வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான அணி தனது பத்திரிகையாளர் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார்கள்.
‘ஊழலற்ற நிர்வாகத்தைத் தருவோம்’ என்கிற கோஷத்தோடு ‘வளமும், வலிமையும் சேர்க்கும் அணி’ என்ற பெயரில் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் இந்த அணியினர்.
தான் தலைவர் பதவிக்கு ஏன் போட்டியிட வேண்டிய நிலைமை வந்தது என்பது பற்றி விரிவாகவே பேசினார் ஏ.எல்.அழகப்பன். இவரது துணைத் தலைவர் பதவிக்கு கே.ராஜன் போட்டியிடுகிறார். செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை.
ஏ.எல்.அழகப்பன் அணியின் சார்பில் 21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் ஆர்.வி.உதயகுமார், எஸ்.வீ.சேகர், விஸ்வாஸ் சுந்தர், சுரேஷ் காமாட்சி, எம்.வி.கோபால்ராம், ஆர்.வடிவேல், கே.விஜயகுமார், எஸ்.கே.விஜயன், கிஷோர்குமார், ஜி.கிச்சா, எஸ்.முத்துசாமி, எம்.ஏ. நேரு எட்வின்ராஜ், பியாரிலால் குண்டச்சா, ரகுநாதன் என்ற ரகு. ஜெ.வி.ருக்மாங்கதன், கே.பாலு, ஜாக்குவார் தங்கம், கலைப்புலி ஜி.சேகர், டாக்டர் கே.காளிதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகளாக திருட்டு டிவிடி, உறுப்பினர்களுக்கான இன்ஸூரன்ஸ் தொகை அதிகரிப்பு, இலவச லேப்டாப், சினிமா நிகழ்ச்சிகளுக்காக சேனல்களிடமிருந்து மூன்று லட்சம் சன்மானம், விற்காத படங்களின் விற்பனை, அனைவருக்கும் சமமான விளம்பரக் கட்டுப்பாடு, சங்கம் மூலமாகவே FMS விற்பனை என்று 21 விதமான வாக்குறுதிகளை உறுப்பினர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதெல்லாம் நடந்தால் சந்தோஷமே..!!!