full screen background image

’சென்னை பழனி மார்ஸ்’ – சயின்ஸ் பிக்சன் படம் இல்லை: ஆனால் காமெடி படம்..!

’சென்னை பழனி மார்ஸ்’ – சயின்ஸ் பிக்சன் படம் இல்லை: ஆனால் காமெடி படம்..!

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் நிறுவனமும், ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சென்னை பழனி மார்ஸ்.’

இந்தப் படத்தில் புதுமுகங்களே அதிகமாக நடித்துள்ளனர். பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர்.

இவர்களுடன் மதன்குமார், தட்சிணாமூர்த்தி, ஏ.ரவிக்குமார், ஆல்வின் ராமைய்யா,  ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை. படத்தில் ஒரு பாடகரே நடித்திருப்பதாலும், ட்ராவல் படம் என்பதாலும்  மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. சில பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாக இருக்குமாம். 

chennai-palani-maars-movie-poster-2

நிரஞ்சன் பாபு இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார். படத்தின் மூன்று பாடல்களை நாயகர்களில் ஒருவரான  ராஜேஷ் கிரி பிரசாத்தே பாடல்களைப் பாடியுள்ளார்.

வசனம் – விஜய் சேதுபதி, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, இயக்கம் – பிஜு, தயாரிப்பு விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் & ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ்.

இந்தப் படம் தலைப்பில் இருந்து அனைத்திலும் முற்றிலும் புதிய களம், புதிய கதை என நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் பிஜூ பேசும்போது, “நண்பர்கள் இருவர் சேர்ந்து  சென்னையிலிருந்து பழனி வழியாக செவ்வாய் கிரகத்திற்குப் போக முடியுமான்னு முயற்சி பண்றாங்க.

அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடந்து அவரது பையனும் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான். அவனுடன் அவனது நண்பனும் சேர்ந்து கொள்ள பயணம் சென்னையிலிருந்து பழனியை நோக்கித் தொடங்குகிறது. 

chennai-palani-maars-movie-poster-3

இவர்களின் கனவும், பயணமும் மற்றவர்களால் எப்படி பார்க்கப்படும்..? என்னென்ன சுவாரஸ்யங்கள்  நடக்கும்..?  அதில் உள்ள காமெடியும்தான் படமே. அவர்கள் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணம் என்பதால் இது சயின்ஸ் பிக்சன் படமோ அல்லது கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த காலச் சக்கர பயணம் குறித்த படமோ அல்ல.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் இல்லையா.. சிலரிடம் அதை சொன்னால் நம்பக்கூட மாட்டார்கள். ஆனால் நமது கனவை நோக்கி விடாமுயற்சியுடன்  முயற்சித்தால் அதை அடையலாம் என்பதைத்தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

cpmars 7

நம்முடைய கனவு ஜெயிக்க வேண்டுமென்றால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்படுங்கள் என்பதையே இப்படம் உங்களுக்கு செய்தியாகச் சொல்லும்.

முனிவர்கள் சித்தர்கள் காலத்திலேயே இப்படி எண்ணங்கள் மூலமாக பயணம் செய்திருக்கும் நிறைய செய்திகள் உண்டு. ராவணன் நினைத்ததும் புஷ்பக விமானம் வந்து நின்றதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இங்கே புஷ்பக விமானம் என்பதுகூட அவரது சிந்தனைதான். 

ராமாயணத்தில் வந்த புஷ்பக விமானம் பற்றி படித்தபோது இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு படமாக உருவாக்கும் எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக உருவானதுதான் இந்தக் கதை.

ஒளியின் பயண வேகம் மணிக்கு பல லட்சம் கிலோ மீட்டர் என்று சொல்லுவார்கள். அந்த வேகத்தில் பயணித்தால்கூட இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சில பகுதிகளை சென்று அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டு உள்ளார்கள்.

cpMars2

பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு  வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ் மூலமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இன்னொரு நபருக்கு செய்தி அனுப்ப முடியும் என சொல்லி இருந்தால் நீங்கள் நம்பி இருப்பீர்களா..? ஆனால் அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது..

இந்தப் படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதால் நடிப்பு பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஒர்க்ஷாப் நடத்தினோம்.

படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் உள்ளது. ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடித்த படங்களும் வேண்டும்.    எல்லாவிதமான படங்களும் வரும்போதுதான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும்.

cpmars 3

ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இன்றைய காலகட்டத்தில் ரிலீஸ் செய்வது என்பது  எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் கதை பற்றி ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்கு தெரியும்.

இந்தப் படம் நல்லபடியாக வெளிவரவேண்டும் என்பதற்காக ஒரு நண்பராக, ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு எனக்கு பட வெளியீட்டு பணிகளில் மிகுந்த உதவியாக இருந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஒரு சீனில்கூட விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவில்லை.

தற்போது படத்தின் இசை வெளியாகியுள்ளது. படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது…” என்றார் இயக்குநர் பிஜூ.

Our Score