அஞ்சலி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் அரிமா என்.இராமலிங்கம் தயாரித்துள்ள புதிய படம் ‘எந்த நேரத்திலும்’.
இந்தப் படத்தில் ராமகிருஷ்ணனும், யாஷ்மித்தும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். லீமா ரோஸ் மற்றும் சண்ட்ரா எமி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் சிங்கம் புலி உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சாலை சகாதேவன், படத் தொகுப்பு – பார்த்தசாரதி, பின்னணி இசை – சபேஷ் – முரளி, பாடல் இசை – டீ.சதீஷ், கலை இயக்கம் – அப்பு, பாடல்கள் – அஸ்மின், நடனம் – சாந்திகுமார், சண்டை பயிற்சி – இந்தியன் பாஸ்கர், ஸ்டன்னர் சாம், உடை வடிவமைப்பு – மயில் (எ) உதயகுமார், தயாரிப்பு நிர்வாகம் – சாமி (எ) ரங்கநாதன், மக்கள் தொடர்பு – நிகில், அலுவலக நிர்வாகம் – அரிமா ஆ.முத்தழகு, இணை தயாரிப்பு – உமா இராமலிங்கம், தயாரிப்பு – அரிமா N.இராமலிங்கம், எழுத்து, இயக்கம் – சு.முத்துக்குமார்.
பாவத்தின் சம்பளம் மரணம் எனும் கருத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
தன் சகோதரிக்கு பிடிக்காத ஒரு பெண்ணை விரும்பும் நாயகன் அவள் எதிர்ப்பை மீறி நாயகியை கரம் பிடிக்க முடிவெடுக்கிறான். இந்த சூழ்நிலையில் நாயகனின் சகோதரிக்கு ஒரு ஆபத்து ஏற்படுகிறது. அதே நேரம் தன் காதலியைக் கரம் பிடிக்க வேண்டியிருக்கிறது. ஆபத்தில் இருந்து தன் சகோதரியை காப்பாற்றினானா… அல்லது தன் காதலியை கரம் பிடித்தானா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார்களாம்.
இதன் படப்பிடிப்பு ஊட்டி, கோத்தகிரி, கோவை மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.
அனைத்து தரப்பு இரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமாக உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.