ஸ்ரீசிவன்யா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமார் இராஜேந்திரன் தயாரித்துள்ள திரைப்படம் ‘யாமா’. இது, இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும்.
இந்தப் படத்தில் நாயகனாக விஜு அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். ‘அங்காடித் தெரு’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நடித்த இயக்குநர் A.வெங்கடேஷ் எதிர் நாயகனாக நடித்துள்ளார்.
எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் சையத் இயக்கியுள்ளார்.
‘யாமா’ திரைப்படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகவுள்ளது. முழுக்க, முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.