கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இயக்குநர் பூபதி பாண்டியனின் இயக்கத்தில் விமல் நடித்திருந்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியானது.
குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருந்த இந்தப் படம், வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
ஒரு புதிய படத்தின் ஆயுட்காலம் முதல் வாரத்துடன் முடிந்து விடுகிற இன்றையச் சூழலில் இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் ‘மன்னர் வகையறா’ ஓடிக் கொண்டு இருப்பதே இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான சான்று. இதனால் அளவற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கிறார் விமல்.
“இந்தப் படம் நிச்சயம் எனக்கு வெற்றிப் படமாக அமையும். அதன் பின்புதான் புதிய படங்களை ஒப்புக் கொள்வேன்” என்று சொல்லி இந்தப் படத்திற்கு தனது முழு உழைப்பயும் தந்து காத்திருந்தார் விமல்.
அவருடைய எதிர்பார்ப்புக்குற்றார்போல் இப்போது விமலுக்கு ஐந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்து அனைத்தையும் ஒத்துக் கொண்டு அவற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விமல்.
‘வெற்றிவேல்’ படத்தின் இயக்குநரான வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய் உட்பட இன்னும் இரண்டு இயக்குனர்களின் படங்களில் விமல் நடிக்கவுள்ளார்.
இது தவிர இயக்குநர் சற்குணத்தின் டைரக்சனில் ‘K2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக இருக்கிறது.
ஆக, இந்த வருடம் அடுத்தடுத்து விமலின் படங்கள் வெளியாக இருக்கின்றன என்பது விமலின் ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம்.