full screen background image

பாரதிராஜா-சத்யராஜ்-விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம் துவங்கியது..!

பாரதிராஜா-சத்யராஜ்-விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம் துவங்கியது..!

நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கும் புதிய படம் வள்ளி மயில்’.

இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா மூவரும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கு படமான ‘ஜதி ரத்னலு’ படத்தில் நாயகியாக நடித்த ஃபரியா அப்துல்லா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா மற்றும் பலரும் நடிக்கவுள்ளனர்.

எழுத்து, இயக்கம் : சுசீந்திரன், இசை : D.இமான், ஒளிப்பதிவு : விஜய் k.சக்கரவர்த்தி, படத் தொகுப்பு : ஆண்டனி, கலை இயக்கம் : K.உதய குமார், பாடல்கள் : யுகபாரதி, நடன இயக்கம் : ஷோபி, சண்டை பயிற்சி இயக்கம் : ஸ்டன் சிவா, உடைகள் வடிவமைப்பு : ராதிகா சிவா, பத்திரிகை தொடர்பு : ஜான்சன், விளம்பர வடிவமைப்பு : ட்யூனி ஜான், இணை தயாரிப்பு : கார்த்திக், தயாரிப்பு நிறுவனம்: நல்லுசாமி பிக்சர்ஸ், தயாரிப்பாளர் : தாய் சரவணன்.

1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக இத்திரைப்படம் உருவாகிறது.

இந்த ‘வள்ளி மயில்’ படத்தின் படப்பிடிப்பு இன்று திண்டுக்கல்லில் பூஜையுடன் துவங்கியது. தமிழக உணவு துறை அமைச்சர் சக்ரபாணி கிளாப் அடித்து இந்தப் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான இந்தப் படப்பிடிப்பு, திண்டுக்கல்லைச் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது.

இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் நடிகர் ஆண்டனி, நாயகியான ஃபரியா அப்துல்லா இருவரும் கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்து, சத்யராஜ், பாரதிராஜா, மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா ஆகியோரும் கலந்து கொண்டு நடிக்கவிருக்கிறார்கள்.

இதையடுத்து, கொடைக்கானல், தேனி, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், பழநி ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

Our Score