தன் நகைச்சுவையால் பலரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து, கவலைகளை மறக்கடித்து, அனைவரின் குடும்பத்திலும் ஒருவராய் உறவாடப்பட்ட வைகைப் புயல் வடிவேலு, சிறு இடைவேளைக்கு பிறகு ‘தெனாலிராமன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மீண்டும் தன் நகைச்சுவைப் பயணத்தை துவக்கினார். எதிர்பார்த்ததுபோலவே ‘தெனாலிராமன்’ படமும், வடிவேலுவின் நகைச்சுவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
தற்போது வடிவேலு மிண்டும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கவிருக்கிறார். 1970-களில் நடப்பது போன்ற ஒரு கதையை கொண்டது இப்படம்.
இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஒஹோ பிக்சர்ஸ் சார்பாக ஜி.ராம்குமார் தயாரிக்கிறார்.
இசை – இமான்
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
கலை – தோட்டாதரணி
படத்தொகுப்பு – ராஜாமுகமது
படபிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது.