full screen background image

‘வைகைப் புயல்’ வடிவேலுவுடன் கை கோர்க்கும் ஜி.வி.பிரகாஷ் 

‘வைகைப் புயல்’ வடிவேலுவுடன் கை கோர்க்கும் ஜி.வி.பிரகாஷ் 

சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார் நடிகர் வடிவேலு. இனிமேல் மெயின் ஆக்டர் மட்டுமல்ல.. காமெடியனாகவும் சினிமாவில் வலம் வரப் போகிறேன் என்று இந்தாண்டு துவக்கத்தில் வாக்குறுதியளித்தார் நடிகர் வடிவேலு.

அதன் தொடர்ச்சியாய் ஏற்கெனவே விஷாலுடன் கத்திச் சண்டை படத்தில் சுராஜ் இயக்கத்தில் மீண்டும் தனது காமெடி ராஜாங்கத்தைத் துவக்கியிருக்கும் வடிவேலு அடுத்து இணைந்திருப்பது ஜி.வி.பிரகாஷுடன்.

‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இயக்குநரான ராம்பாலா புதிதாக இயக்கப் போகும் படத்தில் வடிவேலு ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கப் போகிறார். இந்த நகைச்சுவை திரைப்படத்தை ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ சார்பில் தயாரிப்பாளர் ஸ்டீபன் தயாரிக்கவுள்ளார். 

வடிவேலுடன் இணைந்து நடிப்பது பற்றி பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், “என்னுடைய சிறு வயதிலிருந்தே நான் வடிவேலு சாரின் திரைப்படங்களை பார்த்துதான் வளர்ந்து இருக்கிறேன். அவருடைய உடல் அசைவும், அவருடைய செய்கைகளும் ரசிகர்களின் நகைச்சுவை நரம்பை தட்டி எழுப்பும். அப்படிப்பட்ட வடிவேலு சாரோடு நான் நடிக்கப் போவதை நினைத்தால் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ராம்பாலா கூறும்பொழுதே, வடிவேலு சார் மட்டும்தான்  இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பதை நானும், தயாரிப்பாளர் ஸ்டீபனும் முடிவு செய்துவிட்டோம்.

மதுரை மாவட்டத்தின் ‘வைகை புயல்’ தற்போது மீண்டும் புத்தம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க தயாராக இருங்கள்…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

Our Score