full screen background image

‘உப்பு கருவாடு’ படத்தின் வெற்றியால் தியேட்டர்கள் கூடுகின்றன..!

‘உப்பு கருவாடு’ படத்தின் வெற்றியால் தியேட்டர்கள் கூடுகின்றன..!

‘நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள்தான் ஓடும்.. சின்ன பட்ஜெட் படங்கள் பெரிதாக ரசிகர்களை கவராது’ என்று கூறப்படும் ஜோதிடத்தை உடைத்து எறிந்திருக்கிறது இயக்குநர் ராதாமோகனின் ‘உப்பு கருவாடு’ திரைப்படம். திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து இந்தப் படத்தை திரையிட பெருகி வரும் கோரிக்கையே இதற்கு சாட்சி.

ஊடகங்களின் பாராட்டு, திரை உலகினரின் பெருமிதப் பாராட்டு, படம் பார்த்தவர்கள் அடுத்தவர்களிடம் இந்தப் படத்தை பாராட்டி, பார்க்க வேண்டிய படம் என்று மவுத் டாக் பிரச்சாரம் செய்வது ஆகியவை  படத்தின் வெற்றிக்கு உரமாக இருக்கிறது. 

தான் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்ற அதிர்ஷ்ட தூதரான நடிகர் கருணாகரன், மிக சிறந்த நடிப்பை காட்டியிருக்கிறார் என எல்லோராலும் பாராட்டப்படும் நந்திதா, வித்தியாசமான வேடத்தில் கலக்கும் எம்.எஸ்.பாஸ்கர், புதிய வரவான ‘டவுட்’ செந்தில், விலாநோக சிரிக்க வைத்திருக்கும் மயில்சாமி, தனது வசன வரிகளால்   ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கும் வசனகர்த்தா பொன்.பார்த்திபன், துள்ளலான பாடல் மற்றும் பின்னணி இசையால் கவர்ந்திருக்கும் இளம் இசை அமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், தனக்கே உரிய ஒரு பிரத்தியேக வடிவத்தில் படத்தை செதுக்கியிருக்கும் இயக்குநர் ராதா மோகன்,  தேவைக்கேற்ப திட்டமிட்டு  செலவு செய்த தயாரிப்பாளர் ராம்ஜி,  முறையாக விளம்பரம் செய்து, கடும் போட்டிகளுக்கிடையே நிறைய திரையரங்குகளில் படத்தை திரையிட்ட  ‘ஆரா சினிமாஸ்’ விநியோக நிறுவனம்  என இந்த ‘உப்பு கருவாடு’ படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்கள் ஏராளம். 

“நாங்கள் எல்லோரும் எங்களுக்கு இடப்பட்ட பணியை செவ்வனே செய்தோம். ஆயினும் ஒரு நல்ல கேப்டனாக   இந்தப் பணியைத்  திறம்பட நடத்தி செல்லும் இயக்குனர் ராதாமோகனுக்குத்தான் இந்த வெற்றி முழு உரிமையானது.

திரையிடப்பட்ட இடங்களில் இருந்து வரும் பாராட்டுச் செய்திகள் படத்தை விநியோகித்தவர்கள் என்ற முறையில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நல்ல கதை இருந்தால், சின்ன பட்ஜெட் படமும் பெரிய படமாகிவிடும் என்று இந்த ‘உப்பு கருவாடு’ படம் தமிழ்த திரையுலகத்தினருக்கு உணர்த்தியிருக்கிறது..” என்றார் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ்.

Our Score