full screen background image

‘அரண்மனை’யை உதயநிதி ஸ்டாலினும், தேனாண்டாள் பிலிம்ஸும் சேர்ந்து வெளியிடுகின்றனர்..!

‘அரண்மனை’யை உதயநிதி ஸ்டாலினும், தேனாண்டாள் பிலிம்ஸும் சேர்ந்து வெளியிடுகின்றனர்..!

ஒரு படத்தை இரண்டு, அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து தயாரிப்பார்கள்.. இது வழக்கமானதுதான். ஆனால் இரண்டு பேர் சேர்ந்து ஒரு படத்தை வாங்கி திரையிடும் விநியோகஸ்தர்கள் வேலையைச் செய்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதே..?

வினய், ஹன்ஸிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி நடிப்பில் சுந்தர் சி தயாரித்து இயக்கியிருக்கும் ‘அரண்மனை’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து திரையிடப் போகிறார்களாம். இன்றைக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

நேற்றுவரையிலும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த அரண்மனை படத்தை திரையிடப் போவதாக சொல்லி வந்தது. அதற்குள் ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை. திரு.இராம.நாராயணனின் மறைவுக்கு பின்பு அவருடைய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இராம.நாராயணன் படங்களைத் தயாரிக்காமல் இருந்தபோது விநியோகஸ்தராக பல படங்களை வாங்கி திரையிட்டு வந்தார். அந்த அனுபவத்தில் அவருக்கென்று சில குறிப்பிட்ட திரையரங்குகள் எப்போதும் காத்திருக்கும். அவைகளோடு இப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸின் படங்களை திரையிடும் வழக்கமான தியேட்டர்களும் இந்த அரண்மனைக்காக புக் ஆகியிருக்கும் போல தெரிகிறது..!

ஆக.. இந்த ‘அரண்மனை’ நல்ல வெள்ளிசத்தில்தான் வரப் போகிறது..!

Our Score