full screen background image

தூதன் – முன்னோட்டம்

தூதன் – முன்னோட்டம்

பிரபல நடிகர்களை வைத்து பல படங்களின் தயாரித்தவர் விஷ்வா சுந்தர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளார்.

அவர் சன் மூன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு “தூதன்” என்று பெயரிட்டுள்ளார். சில வருட இடைவெளிக்கு பிறகு ஜீவன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரபல கன்னட நடிகை ஜெயமாலா மகள் சௌந்தர்யா அறிமுகமாகிறார்.

வசனத்தை குரு.சம்பத்குமார் எழுதுகிறார்.
ஒளிப்பதிவு – ரங்காபாலாஜி
பா.விஜய், ஏக்நாத் பாடல்களுக்கு விஜய் இசையமைக்கிறார்.
கலை – ஷிவா யாதவ்
நடனம் – ஸ்ரீதர்
தயாரிப்பு – வி.சுந்தர்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் செல்வா.

இது இவர் இயக்கும் 27 வது படம். ஏற்கெனவே ஜீவன் – டைரக்டர் செல்வா இருவரும் இணைந்து நான் அவனில்லை – 1, 2 என இரண்டு பாகங்களை வெற்றிப் படங்களாகக் கொடுத்தவர்கள்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…. “உன்னை அறிந்தால் – நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் – உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ – வாழலாம் என்கிற என்.ஜி.ஆர்.பாடி நடித்த பாடல் வரிகளேயே கதைக் களமாக்கி இருக்கிறேன்..” என்றார் செல்வா.

Our Score