‘ஈ’ படத்திற்கு பின் ஜீவா, நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்து வரும் ‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.செந்தில்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். இசை – ஸ்ரீ, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, எடிட்டிங் – வி.டி.விஜயன், கலை இயக்குனர் – சீனு, சண்டைப் பயிற்சி – சூப்பர் சுப்பராயன், நடனம் – பாபி, பாலகுமார் ரேவதி, தினா. இயக்கம் – பி.எஸ்.ராம்நாத்.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை நயன்தாரா, இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவா நடித்திருக்கிறார்.
காமெடியுடன் காதலும், ஆக்சனும் கலந்த இப்படத்திற்காக கும்பகோணத்தில் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் தினமும் ஆயிரம் துணை நடிகர்கள் நடிக்க, படத்தின் முக்கிய காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.