மதுரை விமான நிலையத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டிருப்பது திரையுலகில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனின் திருவுருவச் சிலை இன்று திருச்செந்தூரில் திறக்கப்படவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனும், சிவகார்த்திகேயனும் இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றுள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் கமல் முதலில் வெளியேறிவிட.. பின்பு நடிகர் சிவகார்த்திகேயனு்ம் வெளியில் வந்துள்ளார். அப்போது அவரைச் சூழ்ந்து கொண்ட கமல் ரசிகர்கள் ஏதோ கோபத்துடன் , கடும் சொற்களை வீசி சிவகார்த்திகேயனை தாக்கியிருக்கிறார்கள். இதன் வீடியோ பதிவில் இது அப்பட்டமாகத் தெரிகிறது.
கமலுக்கும், சிவகார்த்திகேயனுக்கு்ம் மோதல் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்னும்போது எந்தக் காரணத்துக்காக ரசிகர்கள் அவரைத் தாக்கினார்கள் என்பது புரியவில்லை.
ஒரு நடிகர் ரசிகர்கள் மற்றொரு நடிகரைத் தாக்கும் அளவுக்கு செல்வது திரையுலகத்திற்கு நல்லதல்ல..! இதனை சம்பந்தப்பட்டவர்கள் முளையிலேயே கிள்ளிவிடுவது அவர்களுக்கும், திரையுலகத்திற்கும் நல்லது.