full screen background image

ஜனவரி 25-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் கே.ஜே.யேசுதாஸின் பிரம்மாண்டமான இசைக் கச்சேரி..

ஜனவரி 25-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் கே.ஜே.யேசுதாஸின் பிரம்மாண்டமான இசைக் கச்சேரி..

‘தெய்வம் தந்த வீடு’, ‘அதிசய ராகம்’, ‘விழியே கதை எழுது’, ‘செந்தாழம் பூவில்’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘கண்ணே கலைமானே’, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே….’ என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர்… தாலாட்டிக் கொண்டிருப்பவர் இசை மாமேதை ’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ்.

திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம் வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார்.

சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும் வென்றவர். போகாத நாடில்லை.. பாடாத மொழியில்லை.. பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு அள்ள அள்ளக் குறையாத இசைப் புதையலாய் விளங்குகிறது.

இத்தகைய ஈடு இணையற்ற மகத்தான பாடகர் திரையுலகில் தனது ஐம்பதாவது சாதனை வருடத்தை நிறைவு செய்து தனது இசைப் பயணத்தை இன்றளவும் இனிதே தொடர்ந்து கொண்டிருப்பதை கவுரவித்து.. அதனை ஒரு இசைத் திருவிழாவாகவே போற்றிக் கொண்டாடும்வகையில், ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி – ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றன.

வரும் ஜனவரி 25-ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவரும்  திரண்டு வந்து தங்களின் அபிமான பாடகரைப் போற்றி கவுரவிக்க உள்ளனர்.

6 மணி நேரத்துக்கும் மேலாகப் பொழியவுள்ள இசை மழையில், திரு.யேசுதாஸ் அவர்களின் காலத்தால் அழியாத இன்னிசை கீதங்கள் நம்மையெல்லாம் நனைத்து மூழ்கடிக்கக் காத்திருக்கின்றன.

சங்கீத சங்கமமாய் அமையும் இந்நிகழ்வில் பல்வேறு இசையமைப்பாளர்களும், பின்னணிப் பாடகர்களும், புகழ் பெற்ற இசைக் கலைஞர்களும் இசைத்துப் பாடி கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தளிக்க உள்ளனர்.

இந்த இசை விழா, கடந்த ஜனவரி 10-ம் தேதியன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடிய திரு.யேசுதாஸ் அவர்களை பாராட்டும்விதமாகவும் அமைகிறது.

இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. நுழைவுச் சீட்டுகள் கண்கவர் விதமாகவும், புதுமையாகவும் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் வடபழனி, லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் / எம்-6 ஈவண்ட்ஸ் – சி.ஐ.டி நகர், நந்தி சிலை அருகில் / நாயுடு ஹால் – அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு: 99419 22322, 98419 07711, 88070 44521, 044 – 4286 7778.

இணையதளம் மூலமாக (Online Ticket Booking) டிக்கெட் முன்பதிவு செய்யவும் கீழ்க்கண்ட இணையத்தளங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது

www.lakshmansruthi.comwww.ticketnew.comwww.bookmyshow.com, www.madrasevents.in, www.indianstage.in  , www.meraevents.com, www.eventjini.com

Our Score