full screen background image

புஷ்பா பட பாடலைப் பாடி புகழ் பெற்ற பாடகி இந்ரவதி செளகான் தமிழில் அறிமுகமாகிறார்

புஷ்பா பட பாடலைப் பாடி புகழ் பெற்ற பாடகி இந்ரவதி செளகான் தமிழில் அறிமுகமாகிறார்

சமீபத்தில் மிகவும் பிரபலமான ‘ஊ அண்டா வா’ தெலுங்கு பாடலை பாடிய பாடகியான இந்ரவதி சௌகான் தமிழில் அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குநரான பெருமாள் காசியின் இயக்கத்தில், எல்.என்.எச்.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்  க.லட்சுமிநாராயணன் தயாரிக்கும் ‘என்ஜாய்’ என்ற படத்தின் மூலம்தான் பாடகி இந்ரவதி செளகான் தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘சங்கு சக்கர கண்ணு’ என்ற பாடலை இந்ரவதி செளகான் தனது வசீகரமான குரலில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். K.M.ரயான் இசையமைத்துள்ளார்.

இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

“புஷ்பா’ படத்தில் நான் பாடிய ‘ஊ.. அண்டா வா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியது போல இந்த ‘சங்கு சக்கர கண்ணு’ பாடலும் பெரும் வரவேற்பை பெரும்…” என்கிறார்.

தமிழில் பாடுவது பெரும் விருப்பமாகவுள்ளதாகவும், தொடர்ந்து தமிழில் பாட வாய்ப்புகள் வருவதாகவும் கூறினார் இந்ரவதி செளகான். 

Our Score