நடிகர் சிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார்.
கடந்தாண்டின் கவனிக்கத்தக்க படைப்பாக வெளிவந்த ‘சத்யா’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு அந்தப் படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் சிபிராஜ் நடிக்கவிருக்கிறார்.
இதே படத்தில் நடிகர் சத்யராஜூம் சிபிராஜூடன் இணைந்து நடிக்கிறார். ஜாக்சன் துரை படத்திற்குப் பிறகு அப்பா, மகன் நடிகர்கள் இந்தப் படத்தில்தான் இணைந்து நடிக்கவுள்ளார்கள். இந்தப் படத்தில் நடிகர் நாசரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முற்றிலும் புதுவிதமான திரைக்கதையைக் கொண்ட இப்படத்தினை தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தயாரிப்பு நிர்வாகம் – சரவணன்.எஸ்., தயாரிப்பு மேற்பார்வை – ஜி.கோகுல், இசை – சைமன் கே.கிங், இயக்கம் – பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர்கள் – Dr. ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன், தயாரிப்பு நிறுவனம் – கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், மக்கள் தொடர்பு – தர்மதுரை.N & ரேகா.
படத்தின் மற்ற தொழில் நுட்பக் குழு உறுப்பினர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக ஜனவரியில் முடிவடைய உள்ளது.