நெல்லை ஜீவா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.கமல் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘சரமாரி’ திரைப்படம்.
அறிவழகன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், மனோஜ் என நான்கு பேர் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக ஹேமலதா நடிக்கிறார். இவர் ‘பாயும் புலி’, ‘அறம் சினம்’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், பாம்பே செல்வம், சுஜாதா மற்றும் தயாரிப்பாளர் நெல்லை ஜீவாவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் அர்வின் இசையமைக்கிறார். பாடல்களை சஞ்சய் செல்வம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பு பணிகளை பாம்பே செல்வம் கவனிக்கிறார்.
நெல்லை அருகில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘மாஸ்’ கலர்ந்த கமர்ஷியல் படமாக பரபரப்பாக உருவாகி வருகிறது இந்த ‘சரமாரி’ திரைப்படம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பொள்ளாச்சி, திருச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.