full screen background image

காமெடி, காதல், நட்பு, குடும்பம் கலந்த கதையில் உருவாகும் புதிய படம்!

காமெடி, காதல், நட்பு, குடும்பம் கலந்த கதையில் உருவாகும் புதிய படம்!

இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 24.08.26 நேற்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது.

பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை முறை, நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது.

நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் விஷயங்கள் எல்லாமே சாதாரணமானவைதான்.

ஆனால் சரியான மனிதர்கள் ஒன்று சேர்ந்து, சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாக திரும்பும்போது… அந்தச் சாதாரண விஷயங்களே செம கலாட்டாவாக மாறிவிடும்!

அப்படிப்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு, நட்பு, காதல், குடும்ப உறவுகள், misunderstanding, comedy என ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணையும் கதையாக இப்படம் உருவாகிறது.

சிரிப்புக்கு நடுவே காதல், கலாட்டாவுக்கு நடுவே பாசம், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு நடுவே emotion என, ரசிக்கவும் feel பண்ணவும் வைக்கும் ஒரு ஜாலியான திரை அனுபவமாக படம் உருவாகி வருகிறது.

கதையின் பலம்… திரைக்கதையின் வேகம்… இயக்கத்தின் ரசனை!

இப்படத்தின் முக்கிய கிரியேட்டிவ் கூட்டணியாக டாக்டர் எஸ். கார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சீயோன் ராஜா இணைந்துள்ளனர்.

கதை, வசனம் மற்றும் தயாரிப்பு – டாக்டர் எஸ். கார்த்திகேயன்
திரைக்கதை மற்றும் இயக்கம் – சீயோன் ராஜா
தயாரிப்பு நிறுவனம் – பெஸ்டி பிக்சர்ஸ்

கதையின் மையத்தையும் கதாபாத்திரங்களின் உலகத்தையும் உருவாக்கியிருக்கும் டாக்டர் எஸ். கார்த்திகேயனின் கதை மற்றும் வசனத்தை, சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்து, தனது இயக்குநர் பார்வையில் திரைக்கு கொண்டு வருகிறார் சீயோன் ராஜா.

இளம் நட்சத்திரங்கள்… அனுபவம் வாய்ந்த காமெடி கூட்டணி!

இப்படத்தில் ரோஷன் மற்றும் சபரி கணேஷ் கதாநாயகர்களாகவும், அஸ்மிதா மற்றும் வர்ணா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

மேலும் ரமேஷ் கண்ணா கதாநாயகனின் தந்தையாகவும், சுஜாதா (பருத்திவீரன்) தாயாகவும் நடிக்கின்றனர்.

அதோடு அஸ்மிதா (மஸ்காரா), கஞ்சா கருப்பு, லொள்ளு சபா சுவாமிநாதன், மதுரை காளையன் மற்றும் சிங்கமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இளம் நடிகர்களின் energy-க்கும், அனுபவம் வாய்ந்த நடிகர்களின் comedy timing-க்கும் இடையேயான combination, கதையின் கலாட்டாவை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு – வினோத் பெருமாள்
கலை இயக்கம் – ஜெயா முருகன்
இசை – விக்னேஷ் ராஜா
மேலாண்மை – வினு சுந்தரம்
பத்திரிக்கை தொடர்பு – பரணி அழகிரி (PRO)
ஆடை வடிவமைப்பு – Beaulet

இளமைத் துடிப்பு நிறைந்த visuals, catchy music, இயல்பான கதாபாத்திரங்கள் மற்றும் கலகலப்பான சூழ்நிலைகள் என ஒவ்வொரு அம்சத்திலும் ரசிகர்களுக்கு ரசனையான அனுபவத்தை வழங்க படக் குழு பணியாற்றி வருகிறது.

இயக்குநர் சீயோன் ராஜா இயக்கிய முதல் திரைப்படமான  ‘பொது நலன் கருதி’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, அவரது இயக்கத்தில் உருவான ‘சமூக விரோதி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஒரு பக்கம் இளமை…
மறுபக்கம் குடும்பம்…
நடுவில் காதலும் நட்பும்…
அனைத்தையும் சுற்றி செம கலாட்டாவும்!

இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும், தலைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகி, சினிமா ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் படக் குழு தற்போது fun mode-ல் பரபரப்பாக பணியாற்றி வருகிறது.

சிரிக்கலாம்… ரசிக்கலாம்… feel பண்ணலாம்… குடும்பத்தோடு கொண்டாடலாம்! ❤️🎬🔥

Our Score