full screen background image

நடிகை ஜெயசுதாவின் மகன் நிஹார் நடித்துள்ள ‘ரெக்கார்ட் பிரேக்’ திரைப்படம்!

நடிகை ஜெயசுதாவின் மகன் நிஹார் நடித்துள்ள ‘ரெக்கார்ட் பிரேக்’ திரைப்படம்!

நடிகை ஜெயசுதாவின் மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் வரும் மார்ச் 8-ம் தேதியன்று வெளியாகிறது.

ஸ்ரீதிருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர், சத்யா நாராயணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை, கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது..!

இந்த நிகழ்வில் நடிகர் நாகர்ஜூனா பேசும்போது, “இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்பினைக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்” என்றார்.

நடிகர் நிஹார் பேசும்போது, “இது என்னுடைய இரண்டாவது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால்தான் தெலுங்கு உட்பட எட்டு மொழிகளில் இந்தப் படத்தை டப்பிங் செய்திருக்கிறோம். பெரிய திரையில் பார்க்கும்பொழுது அதன் அனுபவத்தை உங்களால் உணர முடியும். யாரும் இல்லாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். உங்களுக்கும் படம் பிடிக்கும்” என்றார்.

நடிகை ராக்தா பேசும்போது, “நான் முதல்முறையாக சென்னைக்கு வந்து இருக்கிறேன். இந்தப் படம் ஒரு சிறந்த கருத்தை பேசி இருக்கிறது. தெலுங்கு பார்வையாளர்கள், தமிழ் பார்வையாளர்கள் என இல்லாமல் எல்லோருக்குமான பான் இந்தியா படமாக இது உருவாகி இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். இந்தப் படத்தை உருவாக்கிய ஸ்ரீனிவாஸ் சாருக்கு நன்றி..” என்றார்.

நடிகை சத்யா பேசும்போது, “ரொம்பவும் வித்தியாசமான கதை இதில் உள்ளது. நீங்கள் நிச்சயம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளரும், நடிகருமான பிரசன்னா குமார் பேசும்போது, “மார்ச்-8 மகா சிவராத்திரி மற்றும் பெண்கள் தினம் அதற்கேற்றார் போல ஆன்மீகம் மற்றும் பெண்களுக்கு வலுவான கன்டென்ட் இந்த படத்தில் உள்ளது. அம்மா செண்டிமெட்ண்ட் மற்றும் விவசாயிகள் பிரச்சினையும் இதில் பேசப்பட்டுள்ளது. ரெஸ்லிங்கில் எப்படி ஹீரோ போட்டிப் போட்டு எதிரி நாடான சீனா, பாகிஸ்தானை ஜெயிக்கிறான் என்பதுதான் இந்த ‘ரெக்கார்ட் பிரேக்’ திரைப்படம். படம் நிச்சயம் ஹிட் ஆகும்” என்றார்.

இயக்குநர் அஜய்குமார் பேசும்போது, “படத்தின் இயக்குநர் ஒரு புதிய கான்செப்ட்டோடு வந்திருக்கிறார். ஏனெனில், இதில் லவ் ஜானர், ஃபேமிலி ஜானர், க்ரைம்- த்ரில்லர் என எதற்குள்ளும் இதை அடைக்க முடியாத புதிய கான்செப்ட். படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும். உங்களுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

தயாரிப்பாளர் பிரசாத் பேசும்போது, “ஸ்ரீனிவாஸ் சார் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவக் கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். கொரோனா சமயத்தில் திரைத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு, இப்போது திறந்திருக்கும் அயோத்தி ராமர்  கோவிலுக்கு வுட் (wood) என பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்.

‘பிச்சைக்காரன்’ படம் வெளியான சமயத்தில் விஜய் ஆண்டனிக்கு தெலுங்கில் பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால், கதை மீது நம்பிக்கை கொண்டு ‘பிச்சக்காடு’ என பெயர் வைத்து அங்கு வெளியிட்டார். படம் தமிழைவிட தெலுங்கில்தான் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல, ‘ஹனுமன்’ படமும் 20-30 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு பல மொழிகளிலும் சேர்த்து ரூ.500 கோடியை வசூல் செய்தது.

அதேபோலத்தான் இந்தப் படத்தின் கதை மீதும் நம்பிக்கை வைத்து எட்டு மொழிகளில் உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று வெளியிடுகிறோம். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ்  பேசும்போது, “இதே சென்னை விஜயா கார்டனில்தான் எனது சினிமா வாழ்க்கைத் தொடங்கியது. யாரும் இல்லாத கதாநாயகன் சிறுவயதிலிருந்து கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு செய்து வருகிறான். ஆனால், அவன் வளர்ந்து ஒரு விளையாட்டு ஆர்வத்துடன் போகும்பொழுது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

மனிதர்களாக நாம் அனைவரும் இங்கு சமம். படத்தின் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. அதை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தை எனக்கு பிடித்த தமிழ் மக்களுக்கும் காட்டுவது ரொம்ப சந்தோஷம். படத்தைத் திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

Our Score