நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியானது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ‘டாக்டர்’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார்.
ஒரு வீடியோவின் மூலம் இந்த படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி மாஸாக அமர்ந்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். ரஜினியின் ரசிகர்கள் இந்தப் புதிய பட அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


இந்தப் புதிய படத்தின் பூஜை ஏப்ரல் 14-ம் தேதியன்று நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நாளில்தான் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.