திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் அன்றும், இன்றும் கொடி கட்டி பறக்கும் நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா, தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானதுதான்; இன்றியமையாததும்தான்.
பொருளாதாரத்தில் பட்டப் ப்படிப்பு முடித்த இவருக்கு விளையாட்டு மேலாண்மை துறையில் உள்ள ஆர்வத்தால் அந்தத் துறையிலே இங்கிலாந்து நாட்டில் உயர் பட்டம் பெற்றார். புலிக்கு பிறந்தது பூனையாக இருக்காது என்ற கூற்றுக்கேற்ப, இவரும் தற்போது தனது தாயின் வழியிலே ஊடக துறையில் கால் பதிக்க வருகிறார்.
New media division என்ற ஒரு நிறுவனத்தை ராடன் டி வியின் உட்பிரிவாக தொடங்கி அதன் மூலம் பல்வேறு youtube சானல்களை நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கிறார். பல்வேறு கலை நிகழ்சிகளும், ரியாலிட்டி shows ஆகியவை இந்தப் பிரிவின் கீழ் இயங்கும். பெரிதும் போற்றப்பட்ட எண்பதுகளின் நடிகர்களின் சங்கமம் இவரது சீரிய பொறுப்பில்தான் இயங்கியது.
இவர் தற்போது தமிழ் திரை/gலகிற்கு பல்வேறு திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் ராடான் குறும் பட விழா ஒன்றை நடத்த இருக்கிறார்.
இது குறித்து பேசிய ரயான், “திரையுலகில் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற துடிப்பில் இருக்கும் இளைஞர்களின், கனவை நிறைவேற்ற இந்தப் போட்டி நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.
எங்களது நிறுவனத்தில் திறமையான இளைஞர்களுக்கு என்றுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த குறும் பட விழா.
இயக்குநர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், படத் தொகுப்பாளர் இயக்குநர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இந்தப் போட்டியின் நடுவர்களாக செயல்பட இருக்கிறார்கள். இவர்களே போட்டியில் கலந்து கொள்ளும் சிறந்த குறும் படத்தை தேர்வு செய்வார்கள்.
வரும் டிசம்பர் 20-ம் தேதி, போட்டியில் கலந்து கொள்ள படங்களை அனுப்பும் கடைசி தேதியாகும். 2016 பிப்ரவரி 11-ம் தேதி இறுதி சுற்று போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறுவர்களுக்கு பரிசும், அவர்களது படைப்புக்கேற்ப பெரிய கௌரவமும், அங்கீகாரமும் தரப்படும். இது அவர்களது கலை பயணத்தில் பெரிதும் உதவும்..” என சாதிக்கப் போகும் நம்பிக்கையுடன் கூறினார்.