ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’.
அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
மேக்கப் ஆர்டிஸ்ட் தசரதன் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு மேக்கப்பில் அதிக வேலை இருந்தது. ப்ரியாமணி உட்பட அனைவருமே கஷ்டப்பட்டுதான் வேலை செய்திருக்கிறோம். படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் ஓம் பிரகாஷ் பேசும்போது, “காஷ்மீரில் ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் செய்தோம். சன்னி மேடம், ப்ரியாமணி மேடம் இருவரும் ரிஸ்க்கான ஸ்டண்ட்டை மழையில் ஒரே டேக்கில் டூப் இல்லாமல் ஓகே செய்தார்கள். இதுபோல பல ரிஸ்க்கான காட்சிகள் இருக்கிறது. ‘யாத்திசை’ படத்துக்குப் பிறகு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் காயத்ரிக்கு நன்றி” என்றார்.
படத் தொகுப்பாளர் வெங்கட்ராமன் பேசும்போது, “எடிட்டாக இந்தப் படம் நிறைய வெர்ஷன் பார்த்தோம். மற்ற தொழில் நுட்பக் கலைஞர்களைப் போலவே எனக்கும் நிறைய வேலை இருந்தது. உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாதன் பேசும்போது, “வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. ஜாக்கி ஷெராப் போன்ற லெஜெண்ட்ஸூடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. ப்ரியாமணி, சன்னி லியோன் இருவரும் சிங்கிள் டேக்கில் ஸ்டண்ட் அசத்தி விட்டார்கள்” என்றார்.
நடிகை அக்ஷயா பேசும்போது, “ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி என சீனியர் நடிகர்கள் எல்லோருமே எங்களிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள். படத்தில் ப்ரியாமணி எனக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் கொடுத்தார். அது பெரிய விஷயம்! படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்” என்றார்.
பாடலாசிரியர் அருண் பாரதி பேசும்போது, “இயக்குநரை இங்கேதான் முதல்முறையாக பார்க்கிறேன். டிரம்ஸ் சிவமணி சார்தான் எனக்கு பாட்டெழுத சொன்னார். படத்தில் நான் எழுதிய அனைத்துப் பாடல்களுமே நன்றாக வந்துள்ளது. இயக்குநருக்கும் பிடித்துள்ளது. படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார்.
நடிகர் பிரதீப் பேசும்போது, “இயக்குநர் விவேக்கும் நானும் நண்பர்கள். அவர் படம் செய்யும்போது எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சீனியர் நடிகர்கள் ப்ரியாமணி, சன்னி லியோனுக்கு நன்றி. அடுத்த மாதம் படம் வெளியாகிறது!” என்றார்.
தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ் பேசும்போது, “எனக்கு தயாரிப்பாளராக வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. மல்டி ஸ்டார்ஸ் படம் என்றால் நிறைய பிரச்சினைகள் வரும் என்று நினைத்தோம். ஆனால், அதெல்லாம் இல்லாமல் ப்ரியாமணி, சன்னி லியோன், அக்ஷயா என எல்லோருமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி” என்றார்.
இணைத் தயாரிப்பாளர் விவேகானந்தன் பேசும்போது, “இது தமிழ்ப் படம்தான். ஆனால், இந்திப் படம் போல எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், டெக்னீஷியன்ஸ் என எல்லோருமே சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இயக்குநர் பாலாவுக்கு பிறகு இயக்குநர் விவேக்கைதான் சொல்வேன். அந்த அளவுக்கு சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்” என்றார்.