full screen background image

‘புஷ்பா’ படத்தை தமிழகத்தில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது

‘புஷ்பா’ படத்தை தமிழகத்தில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா’ படத்தை லைகா நிறுவனம் தமிழகத்தில் வெளியிடவுள்ளது.

இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாகப் படக் குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள். இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை ‘புஷ்பா’ படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score