தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு தற்போது மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தாலும் பிரச்சினைகள் விடவில்லை.
தீர்த்தமலை என்கிற திரைப்படத் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மீதும், நடிகர் பாபு கணேஷ் மற்றும் மற்றொரு தயாரிப்பாளர் சிவக்குமார் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்திருப்பது லேட்டஸ்ட் செய்தி.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் இயக்குநராக பணியாற்றும் தீர்த்தமலை, அந்த சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றபோது அங்கேயிருந்த தயாரிப்பாளர் சிவக்குமார் தன்னைத் தாக்கியதாகவும், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு மற்றும் நடிகர் பாபு கணேஷ் இருவரும் தூண்டுதலாக இருந்தார்கள் என்றும் போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் கூறியுள்ளார்.
சாதாரண புகார்கள் இப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டப் புகார்கள் அளவுக்கு போயிருக்கிறது..! இன்னும் என்னென்ன நடக்கவிருக்கிறதோ..?
தயாரிப்பாளர் தீர்த்தமலை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ள புகார் கடிதம் இது :