‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘என் வழி தனி வழி’ உள்பட பல படங்களை தயாரித்து நடித்தவர், தயாரிப்பாளர் ஆர்.கே.
இவர் சில வருட இடைவெளிக்குப் பின்னர், தற்போது இரண்டு புதிய படங்களை தயாரித்து நடிக்க இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசும்போது, ”நான் தற்போது இரண்டு புதிய படங்களை தயாரித்து அதில் நடிக்க இருக்கிறேன். அதில் ஒரு படம், கடவுளை பற்றியது. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்து காட்டும் வகையில் அந்தப் படம் இருக்கும்.
இன்னொரு படம் கவுரவக் கொலையை கருவாகக் கொண்டது. கவுரவக் கொலை மனிதர்கள் இடையே மட்டுமல்ல. நாய்களுக்கு இடையேயும் இருக்கிறது. வெளிநாட்டு நாய்களுக்கும், இங்கே உள்ள தெரு நாய்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பேசும் கதை அது. இந்தப் படத்துக்கு ‘ரிங் மாஸ்டர்’ என்று பெயர் சூட்டி இருக்கிறேன்” என்கிறார்.