புதிய தலைமுறை இயக்குநர்களை ஊக்குவித்து அவர்களை தனது தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியிருப்பவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார்.
வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார், தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு ‘மாயவன்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால். ‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குநரான நலன் குமாரசாமி இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ், மைம்கோபி, பாபு ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்.
அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் பிரம்மாண்டமாக இப்படம் எடுக்கபடவுள்ளது.
இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் இன்று இனிதே துவங்கியது.