full screen background image

எரியும் சிகரெட்டை முகத்தில் வீசினார் – நெஸ்வாடியா மீது ப்ரீத்தி ஜிந்தா புகார்..!

எரியும் சிகரெட்டை முகத்தில் வீசினார் – நெஸ்வாடியா மீது ப்ரீத்தி ஜிந்தா புகார்..!

கொஞ்சம் அடங்கியிருந்த ப்ரீத்தி ஜிந்தா, நெஸ்வாடியா மோதல் மீண்டும் துளிர் விட்டுள்ளது.

விசாரணை என்ற பெயரில் மும்பை போலீஸ் மிக மெதுவாக நடந்து கொள்வதாக ப்ரீத்தி நினைத்துள்ளார். எனவே இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனுக்கு ஒரு கடிதத்தை எழுதிய ப்ரீத்தி, அதனை நேற்று மீடியாக்கள் பக்கமும் தட்டிவிட்டு கேஸுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்..

கடந்த மே 30–ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது நெஸ்வாடியா தன்னை மானபங்கம் செய்து இழிவாக பேசி மிரட்டினார் என்றுதான் ப்ரீத்தி போலீஸில் புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் குறித்து பிரீத்தி ஜிந்தாவிடம் கூடுதல் விவரங்களை பெற்று போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். மேலும் இதுவரை 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தின்போது பிரீத்தி ஜிந்தாவுக்கு 2 இருக்கைகள் தள்ளி இருந்த மும்பை தொழில் அதிபர் ஜெய் கனோஜியா அளித்த வாக்குமூலத்தில், நெஸ் வாடியா ப்ரீத்தியின் கையைப் பிடித்திழுத்தை தான் கண்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இவ்விவகாரம் தொடர்பாக ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீஸ் கமிஷ்னர் ராகேஷ் மரியாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘எரியும் சிகரெட்டை எனது முகத்தில் நெஸ் வாடியா எறிந்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

“மே 30-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுவதற்கு முன்னதாகவே நெஸ்வாடியா என்னிடம் பலமுறை தவறாக நடந்துகொண்டார். என்னை ஒரு தனியறையில் அடைத்த வாடியா எரியும் சிகரெட்டை என் முகத்தில் வீசினார். அப்போது என்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடக்க முயற்சித்தார்.

நெஸ்வாடியா என்னிடம் இருந்து முற்றிலும் விலக வேண்டும் என்பதே எனது விருப்பம். அப்போதான் என்னால் அமைதியாக வாழ முடியும். அவ்வாறு வாடியால் விலகவில்லை என்றால் என்னை அவர் கொலைகூட செய்யக் கூடும் என நான் அஞ்சுகிறேன். வாடியாவிற்கு நான் எந்த தீங்கும் செய்யவில்லை. எனது பாதுகாப்புக்காகவே நான் புகார் கொடுத்துள்ளேன். அவர் என்னை எதிர்காலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  துன்புறுத்த முயற்சிக்கலாம் என்ற அச்சத்திலே போலீஸில் புகார் அளித்துள்ளேன்..” என்று அந்தக் கடித்த்தில் ப்ரீத்தி கூறியுள்ளார்.

மும்பை போலீஸ்தான் இரண்டு பக்கமும் மாட்டிக் கொண்டு முழிக்கிறது. இரு பக்கமும் பெரிய இடம் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு சிபாரிசுகள் வந்தவண்ணம் இருக்கின்றனவாம்.. போலீஸ் கலாச்சாரத்தின்படி இந்த கேஸை அப்படியே ஆறப் போட்டு.. ஊறப் போட்டு.. ஒண்ணும் இல்லாமல் ஆக்க நெஸ்வாடியா தரப்பில் கரன்ஸிகளை இறக்கிவிட்டிருக்கிறார்களாம்..

இது தெரிந்துதான் ப்ரீத்தி இப்படியொரு பரபரப்பை திடீரென்று ஏற்படுத்தியிருப்பதாக மும்பை மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

Our Score