ஹீரோவுக்கு முதல் படமாக இருந்தாலும் மேக்கிங்கில் குறை வைக்கக் கூடாது என்பதில் சமர்த்தாக இருக்கிறார்கள் ‘பென்சில்’ படத்தின் தயாரிப்பாளர்கள். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் முதல் படமான ‘பென்சில்’ தனது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
இந்தப் படத்தின் 2 பாடல் காட்சிகள் ஜப்பான் நாட்டில் படமாக்கப்படவுள்ளதாம். 25 பேர் கொண்ட படக்குழு இதற்காக நாளை ஜப்பான் தலைநகரம் டோக்கியோவுக்கு பயணிக்கின்றனர். கவிஞர் தாமரையின் வரிகளில் ‘கண்களிலே கண்களிலே கடுகளவு தெரிகிறதே’ மற்றும் ‘யாரை போலும் இல்லா நீயும், எல்லோர் போலும் உள்ள நானும்’ என்ற இரண்டு பாடல்களுக்கு படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாரும், நாயகி ஸ்ரீதிவ்யாவும், நடன இயக்குனர் ஷெரிப்பின் அசைவுகளுக்கேற்ப நடனமாடவுள்ளனர்.
இயக்குனர் மணி நாகராஜ் இப்பாடல்களில் இதுவரை யாரும் பார்த்திராத ஜப்பானின் அழகையும், நகரத்தின் ஒளியையும் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காண்பிக்கவுள்ளார்.