கர்ஸா எண்ட்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஆர்.எஸ். கார்த்திக் மற்றும் பி.ஜி.மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி.ஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘பீச்சாங்கை’.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்ட இந்த ‘பீச்சாங்கை’ படத்தின் டீசர், வெளியான சில நாட்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
“தற்போது ஒட்டு மொத்த திரையுலகமும், ஆஸ்கார் வருது பெற்ற பல திறமையான கலைஞர்களை பாராட்டி கொண்டிருக்கிறது. இன்றைய நாட்களில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
ஏனென்றால், உலக சினிமாவால், அவர்களின் ரசனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. அந்த வகையில், முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகி இருக்கும் எங்கள் ‘பீச்சாங்கை’ படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
வெளியான சில நாட்களிலேயே யூ டியூபில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை எங்கள் டீசர் கடந்திருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். எங்கள் படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி சாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்” என்று உற்சாகமாக கூறினார் ‘பீச்சாங்கை’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.ஜி.முத்தையா.