full screen background image

சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ திரைப்படம்

சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ திரைப்படம்

பலதரப்பட்ட வித்தியாசமான கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நிலைநாட்டி வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய படமாக அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பட்டத்து அரசன்’ படத்தை அறிவித்துள்ளது.

‘சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார்.

நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம்.குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் ஸ்ரீனிவாஸ், படத் தொகுப்பு – ராஜா முகமது, கலை இயக்கம் – ஆண்டனி, பாடல்கள் – விவேகா, மணி, அமுதவன். A, சற்குணம், ஆடை வடிவமைப்பு – நடராஜ், ஒப்பனை – சசி குமார், சண்டைப் பயிற்சி இயக்கம் – கனல் கண்ணன், நடனம் – பாபி ஆண்டனி- ஷெரிஃப், தயாரிப்பு மேலாளர் – எம். கந்தன், புகைப்படங்கள் – மூர்த்தி மெளலி, எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் – சுப்பு நாராயணன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா- ரேகா (D’One).

லைகா புரொடக்‌ஷனின் தலைமை செயல் அதிகாரியான G.K.M.தமிழ்க்குமரன் இந்தப் படத்தை மேற்பார்வை செய்கிறார்.

இந்தப் ‘பட்டத்து அரசன்’ திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப் படுகை மற்றும் ஆடு பண்ணை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினருக்கும் பிடித்த வகையில் குடும்பங்கள் பார்க்கும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டான கதையாக நிச்சயம் இது இருக்கும்.

Our Score