full screen background image

இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ பட டீசர்

இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ பட டீசர்

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் ‘பருந்தாகுது ஊர்க் குருவி.’ சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்துள்ளது.

புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும்  Lights On  Media நிறுவனம் தனது முதல் படைப்பாக இப்படத்தை  தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா, P.வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்ரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன்’ வினோத் சாகர், அருள் D.சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், படத் தொகுப்பு – நாகூரான் ராமச்சந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டை பயிற்சி இயக்கம் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, பத்திரிகை தொடர்பு – AIM சதீஷ்குமார்.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய  தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’  எனும் கருத்தில், திறமைமிக்க இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ள இந்த ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ஒரு அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் பரபர  பயணத்தின் சிறு துளியை அறிமுகப்படுத்தும் வகையில் மிரள வைக்கும் உருவாக்கத்தில் வெளியான முன்னோட்டம் ரசிகர்கள் விமர்சகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும்  ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. 

படம் பற்றி இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் பேசும்போது, “கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும், இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை.

அந்தக் காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன்? எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா? என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம். ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளோம். ஊட்டி, முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும்…” என்றார்.

படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இது குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Our Score