வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் V.K.மாதவன் தயாரித்துள்ள திரைப்படம் ‘பார்க்கத் தோணுதே.’
இந்தப் படத்தில் ஹர்ஷா கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சாரா நடித்துள்ளார். மற்றும் பாண்டு, அப்பு இவர்களுடன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பாடல்கள் – ஓஞ்சியப்பன், ஒளிப்பதிவு – G.ரமேஷ், இசை – மனீஷ், படத் தொகுப்பு – லெனின் சந்திரசேகரன், தயாரிப்பு – V.k.மாதவன், எழுத்து, இயக்கம் – ஜெய் செந்தில்குமார்.
படம் பற்றி இயக்குநர் ஜெய் செந்தில்குமார் பேசும்போது, “காதல், காமெடி, ஆக்ஷன் திகில் கலந்த படமாக இந்த ‘பார்க்கத் தோணுதே’ திரைப்படம் உருவாகியுள்ளது.
நாயகன் ஹர்ஷாவும் அவனது நண்பர்களும் வெட்டியாக அந்த கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறவர்கள்.
அப்படிப்பட்ட ஹர்ஷா அதே கிராமத்தில் இருக்கும் பெண் சாரா மீது காதல் கொள்கிறான். இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.
இந்த நேரத்தில் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் நாயகி சாராவுக்கு பேய் பிடித்துக் கொள்கிறது.
இதன் பின்பு என்ன ஆனது.. அவள் மீதிருந்த பேய் விலகியதா..? காதலர்கள் ஒன்றிணைந்தார்களா.. என்பதுதான் கதை.
படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, கொடைக்கானல், ஒகனேக்கல் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாகவுள்ளது..” என்றார்.