இந்தப் படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷா கொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சேது ஸ்ரீராம்
இசை – இளையராஜா
எடிட்டிங் – K.V.கிருஷ்ணாரெட்டி
நடனம் – ராதிகா, விட்டல்
கலை – ஆனந்தன்
தயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை
நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்
எழுத்து, இயக்கம் – A.M.R. ரமேஷ்
படம் பற்றி இயக்குனர் A.M.R. ரமேஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது.. டப்பிங் மற்றும் இதர பணிகளுமே முடிவடைந்து விட்டது. பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் மட்டுமே இருக்கின்றன. மிக விறுவிறுப்பான திரைக்கதை சினிமா ரசிகர்களை நிச்சயம் திக்குமுக்காடச் செய்யும்.
இப்படத்திற்காக ஷாம் – மனிஷா கொய்ராலா ஜோடிக்காக, ‘யார் இந்த வெல்வெட் கவிதை நெஞ்சில் பூகொட்டும் பறவை’ என்ற பாடல் காட்சியும், ஷாம் – அக்ஷாபட் ஜோடிகளின், ‘ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக’ என்ற பாடல் காட்சியும் பாங்காக்கில் படமாக்கப்பட உள்ளது.
இதற்காக ஷாம் – மனிஷா கொய்ராலா – அக்ஷாபட் நடன இயக்குனர் ராதிகா உட்பட படக் குழுவினர் நாளை பாங்காக் போகிறோம். படப்பிடிப்பு நாளை முதல் பாங்காக்கில் நடக்கிறது..” என்றார். படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறதாம்.