full screen background image

“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு

“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம் ‘நுங்கம்பாக்கம்.’ இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். ஆயிரா, மனோ  இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். A.வெங்கடேஷ் ‘ராம்ராஜ்’ என்கிற வக்கீல் வேடத்திலும் ‘பென்ஸ் கிளப்’ சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஜோன்ஸ் ஆனந்த், இசை – ஷாம் டி.ராஜ், கலை – ஜெய்சங்கர், படத் தொகுப்பு – மாரி, தயாரிப்பு நிர்வாகம் – K.சிவசங்கர், கதை வசனம் – R.P.ரவி, திரைக்கதை, இயக்கம் – S.D.ரமேஷ் செல்வன்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி என்ற பெண்ணின் கதையை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

7H7A6133

படத்தை துவக்கியபோது ‘சுவாதி கொலை வழக்கு’ என்றுதான் இந்தப் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் பெயரை ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்றிவிட்டார்கள்.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால், செயலாளர்களில் ஒருவரான கதிரேசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான விக்ரமன், மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், கவிஞர் சினேகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “இந்தப் படத்தின் முந்தைய டைட்டிலான ‘சுவாதி கொலை வழக்கு’  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன்.

7H7A6070

ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும்போது அது சம்மந்தமான தலைப்பு வைப்பதுதானே நியாயம்..? அப்புறம் எதற்கு இப்போது ‘நுங்கம்பாக்கம்’ என்று தலைப்பை மாற்றினீர்கள்..? சென்சாருக்காகவா.. இல்லை.. யாருடைய நெருக்குதலுக்காகவோ தலைப்பை மாற்றினீர்கள்..? நாம் ஏன் பயப்படணும்..? இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு.. அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.

என்னுடைய ‘இரும்புத்திரை ‘படத்தில் டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப்பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். யாரோ சிலர் தியேட்டர் வாசலில் போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன்.

என்ன ஆனாலும் சரி.. நாம் யாருக்காகவும் நமது படைப்புரிமையை விட்டுவிடக் கூடாது.. எந்தப் பிரச்சினை வந்தாலும் ஒட்டு மொத்தமாக தமிழ்த் திரையுலகமே திரண்டு நின்று அந்தப் பிரச்சனையை சந்திப்போம்…” என்றார்.

7H7A6035

படத்தின் இயக்குநரான எஸ்.டி.ரமேஷ் செல்வன் பேசும்போது, “ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்துவிட்டு, நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது. ஜெயிலுக்கு மட்டும்தான் போகல.. அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்.

எனக்கு வேற வேலை தெரியாது. சினிமா மட்டும்தான் தெரியும். அதுக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் இந்த ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் நல்ல படமாக இருக்கும்..” என்றார்.

Our Score