full screen background image

நயன்தாரா நடிக்கும் 75-வது படம் துவங்கியது..!

நயன்தாரா நடிக்கும் 75-வது படம் துவங்கியது..!

நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தை ZEE Studios, Trident Arts and Naad Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும், நடிகை நயன்தாராவின் 75-வது படமாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

எழுத்து, இயக்கம் – நிலேஷ் கிருஷ்ணா, ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்கம் – ஜாக்கி, படத் தொகுப்பு – பிரவீன் ஆண்டனி, ஆடை வடிவமைப்பு – அனுவர்தன்-தினேஷ் மனோகரன், ஒலி வடிவமைப்பு – சுரேன் & அழகியகூத்தன், விளம்பர வடிவமைப்பு – கபிலன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா – ரேகா D one.

மற்ற நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்தப் படம் இன்று காலை சென்னையில் ஒரு எளிய பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த பூஜை நிகழ்வில் தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, நடிகர்கள் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுப்பு பஞ்சு, நடிகை சச்சு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அழகம்பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா பேசும்போது, “ZEE Studios, Trident Arts ஆகிய இரண்டு புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் எனது முதல் படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக, உணர்கிறேன்.

நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக்  கதையில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. இது அவரது 75-வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை  காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன்  உள்ளேன்.

திரைப்பட உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மாவாக இருக்கும் எனது குருநாதர் இயக்குநர் ஷங்கர் ஸாருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது…” என்றார்.

Our Score