இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே.விவேக் இயக்கியுள்ள திரைப்படம் ’13’.
இந்தப் படத்தில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், ‘கதிர்’ படப் புகழ் பவ்யா த்ரிக்கா, தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்க, இவர்களுடன் ஆதித்யா கதிரும் இணைந்து நடித்துள்ளார்.
இந்த ’13’ படத்திற்கு சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்துகுமார் இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது.
படத்தின் மொத்தப் படப்பிடிப்பு நிறைவடைந்து, இன்று இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. முதல் ஆளாக நாயகன் ஜி.வி.பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்.
இந்த ‘13’ படம் குறித்து இயக்குநர் விவேக் பேசும்போது, “‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ படங்கள் போல, இந்தப் படமும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, ‘13’ என்ற எண்ணை அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை இந்தப் படம் உடைத்துக் காட்டும்.
சில நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் அடிப்படை கதை.
ஜி.வி.பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்” என்றார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் படம் பற்றிப் பேசும்போது, “இந்த ’13’ படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக் களம் புதிதாக இருக்கிறது. ‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.