full screen background image

வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன்

வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.

கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்பாதர் படத்திலும், ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்திலும் நடித்தார் நயன்தாரா.

சமீப நாட்களாக நயன்தாரா இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார். அவர் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகிவிட்டார் என்றெல்லாம் இணையத்தளங்களில் செய்திகள் பிறந்து வளர்ந்தன.

இந்த நிலைமையில் இன்றைக்கு அனைவரையும் அதிர்ச்சியாக்கும்வகையில் தாங்கள் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகிவிட்டதாக தங்களது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருமே தெரிவித்துள்ளனர்.

வாடகை தாய் முறையில் இவர்கள் குழந்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இப்போதும் நயன்தாரா படங்களில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்ததால் அவர் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தாராம்.

மேலும் ஏற்கனவே நயன்தாராவுக்கு 38 வயதாகிவிட்டதால் இனிமேல் கருவுற்று குழந்தை பெறுவது கடினமான செயல் என்பதால் இந்த முடிவை கணவர் குடும்பத்தாருடன் கலந்து பேசி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாடகை தாய் மூலமாக குழந்தை பெறுதல் உலகம் முழுவதுமே நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்தியத் திரையுலகத்திலும் பல பிரபலங்கள் இது மாதிரியாக குழந்தை பெற்றுள்ளனர்.

நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா, சன்னி லியோன், லஷ்மி மஞ்சு, நடிகர் ஷாரூக்கான், பாலிவுட் பட தயாரிப்பாளரும் பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகளுமான ஏக்தா கபூர், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் பல பிரபலங்களும் இதே முறையில் குழந்தை பெற்றுள்ளனர்.

Our Score