இந்தியன் ட்ரீம் தியேட்டர் சார்பில் முனியாண்டி, விஜயகுமார், செல்வேந்திரன் மூவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘முத்துக்குமார் வான்டட்’.
திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் நாயகி, முத்துகுமாரை தேடி மலேசியா செல்கிறாள். இந்த முத்துக்குமாருக்கும் நாயகிக்கும் காதல் ஏதும் இல்லை. இருவரும் முன்பின் சந்தித்ததும் இல்லை. பிறகு எதற்காக நாயகி முத்துக்குமாரை தேடி செல்கிறாள்? இந்த முத்துக்குமார் யார்? இந்த முத்துகுமாரை மலேசியாவில் சந்தித்தாளா ? அவளுக்கு திருமணம் நடைபெற்றதா என்பதை திரில்லர் மற்றும் காதல் கதையாக இயக்குனர் சொல்லி இருக்கிறார். இதில் மலேசியா மற்றும் தமிழ்நாட்டின் தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணிபுரிகிறார்கள்.
நடிகர்கள் :-
சரவணன் (ஹீரோ-மலேசியா)
நஸ்ரியா (ஹீரோயின்-மலேசியா)
நிழல்கள் ரவி
பாத்திமா பாபு
ஜெயமணி
கௌசல்யா (அம்மா)
வாணி
ஒஜிதாஸ் (மலேசியா)
கோகோ நந்தா (மலேசியா)
ரோபோஷங்கர்
ஹரிதாஸ் (மலேசியா)
A.M.R முருகேஷ் (மலேசியா)
தொழில் நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு :- K.முனியாண்டி, K.விஜயகுமார், K.செல்வேந்தரன்
இயக்குனர் :- M.பத்மநாபன்
2nd யூனிட் இயக்குனர் :-V.C.ஜெயமணி
ஒளிப்பதிவு :- M.G.குமார்
இசை :- சுந்தரா
கலை :- ரவீந்தரன் B.F.A
பாடல்கள் :-கோகோ நந்தா
பின்னணி பாடகர்கள் :- சுரேஷ், சத்யன், OG தாஸ், கோகோ நந்தா, பிரியதர்ஷனி, திவாகர் மற்றும் ஐரீன்.
P.R.O. ஆனந்த்