full screen background image

கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘Mr.சந்திரமெளலி’ படப்பிடிப்பு துவங்கியது..!

கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘Mr.சந்திரமெளலி’ படப்பிடிப்பு துவங்கியது..!

Creative Entertainers and Distributors நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் தயாரிப்பில் ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் ‘Mr.சந்திரமௌலி’ திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது.

மேலும் இப்படத்தில்  இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா கேஸன்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதிஷ், ஜெகன், ‘மைம்’ கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

ரிச்சர்ட் M.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் C.S. இசையமைக்கிறார். T.S.சுரேஷ் படத் தொகுப்பு செய்கிறார். ஜாக்கி கலை இயக்கம் செய்கிறார். ஜெயலக்ஷ்மியின் ஆடை வடிவமைப்பில், ‘பில்லா’ ஜெகனின் சண்டை இயக்கத்தில், ஜோசப் ஜாக்சனின் ஒப்பனையில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் இயக்குநரான திரு இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது. இந்த பூஜை நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கேஸண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், இயக்குநர் திரு, இயக்குநர்கள் அகத்தியன், மகேந்திரன், மற்றும் படத்தில் பங்கு பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

g.dhananjayan

இப்படத்தின் தயாரிப்பாளரான ஜி.தனஞ்செயன் படம் பற்றிப் பேசுகையில், ”தமிழ் சினிமாவில், பல வருடங்களுக்கு பிறகு, ஒரு பிரபல ஹீரோவும் அவரது மகனும் இணைந்து நடிக்கும் படம் இது. கவுதமுடன் இணைந்து நடிக்க பல இயக்குநர்கள் கார்த்திக் சாரை இதற்கு முன்பு அணுகியுள்ளனர். ஆனால்,  அதற்கான சரியான கதை அமைந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என கூறிவிட்டார் கார்த்திக் சார்.

ஆனால், எங்களுடைய தயாரிப்பில் உருவாகப் போகும் இந்தப் படத்திற்காக தந்தை- மகன் பற்றிய  சுவாரஸ்யமான கதையை இயக்குநர் திரு, கார்த்திக் சாரிடம் சொன்னபொழுது, அது அவருக்கு மிகவும் பிடித்து போக, இப்படத்தில் நடிக்க உடனே சம்மதித்தார்.

ஒரே ஷெட்யூலில்  இப்படத்தின்  படப்பிடிப்பை முடிக்கும் வகையில் கார்த்திக் சாரும் கவுதம் கார்த்திக்கும் அவர்களது தேதிகளை மொத்தமாக தந்துள்ளனர். இன்று தொடங்கும் படப்பிடிப்பு இடைவிடாமல் சென்னை, புதுச்சேரி மற்றும் பல  இடங்களில் நடக்கவுள்ளது.

நல்ல சினிமாவை என்றுமே கொண்டாடி, வெற்றி பெற வைக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், எங்களது இந்த படத்தையும் வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் இப்படத்தின் கதை அவ்வளவு சுவாரஸ்யமானது.

இந்தப் படத்தை ‘BOFTA Media Works India Pvt Ltd’ சார்பில் எங்களது  ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரிக்கிறது. எங்களது இந்த புதிய நிறுவனம் வரும் காலங்களில் தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்தவுள்ளது” என்றார்.

Our Score