full screen background image

மலையாளத் திரையுலகின் மூத்த நடிகர் மாலா அரவிந்தன் காலமானார்

மலையாளத் திரையுலகின் மூத்த நடிகர் மாலா அரவிந்தன் காலமானார்

மலையாள திரையுலகின் மூத்த நடிகரான மாலா அரவிந்தன் இன்று காலமானார்.

மாலா அரவிந்தன், கடந்த 19-ம் தேதியன்று மாரடைப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்த 22-ம் தேதியன்று மீண்டும் ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மற்றப்பட்டார். கடந்த 6 நாட்களாக சிகிச்சையில் இருந்தவர். இன்று காலை 6.30 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 76.

அரவிந்தன் சிறந்த தபலா கலைஞர் ஆவார். 500-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து உள்ளார். இவரும் இன்னொரு பிரபல நகைச்சுவை நடிகரான ஜெகதி ஸ்ரீகுமாரும் இணைந்து பல மலையாள படங்களில் நகைச்சுவை தர்பாரே நடத்தியுள்ளனர்.

1969-ம் ஆண்டு  ‘சிந்தூரம்’ என்ற படத்தில் சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். ‘என்டே கிராமம்’, ‘தரவாடு’, ‘அதிகாரம்’, ‘ஆலோரோங்கி அரங்கோருங்கி’, ‘தடவரா’, ‘பூதக்கண்ணாடி’, ‘ஓமன பெண்ணினு உரியட பையன்’, ‘கொய்யாயம் குஞ்சச்சன்’, ‘ஜோக்கர்’, ‘மீச மாதவன்’ உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அரவிந்தன்.  இவர் கடைசியாக நடித்த படம் ’லால் பகதூர் சாஸ்திரி.’

அரவிந்தனின் உடல் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

Our Score