full screen background image

“மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்” என மாறுகிறது  

“மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்” என மாறுகிறது  

வி.கே.புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு மாவீரனின் வீர வரலாற்றை இயக்குநர் வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதையின் நாயகனாகவும் நடிக்கிறார்.

அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத எஸ்.கோபிநாத் கேமராவை கையாள, ‘ஸ்டண்ட்’ சில்வா சண்டை காட்சியமைக்க, தினேஷ் நடனம் அமைக்க, பாலமுரளி வர்மன் வசனம் எழுத, ராஜா முகமது படத் தொகுப்பு செய்ய, நிகில் முருகன் பத்திரிக்கை தொடர்பை கவனிக்கிறார்.

விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு நடத்திய நிலையில் விரைவில் ‘மாவீரா படையாண்டவன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை தொடங்கவிருக்கிறது.  

‘ஸ்டண்ட்’ சில்வா அவர்கள் படத்தில் வரும் உக்கிரமான மாஃபியா கேங்குகளோடு கௌதமன் மோதவிருக்கும் மிக முக்கிய சண்டைக் காட்சிக்காக,  மாஸ்டரின் உதவியாளர் சிவாவை வைத்து தினமும் அதிகாலை மூன்று மணி நேரம் மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட மிக கடுமையான பயிற்சியினை அளித்துக் கொண்டிருக்கிறார்.

“அனைத்துவித வயதினரும் கொண்டாடும்படி ஒரு அதிரடியான ஆக்க்ஷன் திரைப்படமாக வெளிவந்து தமிழ்த் திரையுலகில் ‘மாவீரா படையாண்டவன்’ ஒரு மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்தும்…” என உறுதிபட சொல்கிறார் இயக்குனர் வ.கௌதமன்.

Our Score