ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா நிறுவனம், முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டாருடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாகவும், அனஸ்வரா ராஜன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
மேலும் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோ நாராயணன், மயில்சாமி, முத்துக்காளை, சௌந்தர், பேபி மேக்னா சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
‘ஹிருதயம்’ உள்ளிட்ட பல மலையாள வெற்றிப் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, யு.கே.வசந்தகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். படத் தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். ஷிவா யாதவ் கலை வடிவமைப்பு பணிகளை செய்கிறார். பாடல்களை பார்வதி மீரா எழுதியுள்ளார், சண்டை பயிற்சி பணிகளை ஜி.என்.முருகன் கையாள்கிறார்.
நடனம் – கல்யாண்குமார், உடைகள் – தனபால், உடைகள் வடிவமைப்பு – வினோத், மேக்கப் – குப்புசாமி, இணை இயக்கம் – மணிபாஸ்கர் – மணிமாறன், தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.ராம்பிரபு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு – பிரதீப் ரேயான், நிர்வாக தயாரிப்பு – ஹாட் ஸ்டார்- செந்தில், நிர்வாக தயாரிப்பு – கவிதாலயா – எம் மதன், திரைக்கதை – உதய் மகேஷ், சபாபதி ஷண்முகம், ஜி. நரேன்குமார், வசனம் – உதய் மகேஷ், சபாபதி ஷண்முகம், பத்திரிகை தொடர்பு – நிகில் முருகன்.
இப்படத்தை ‘நாளை’, ‘சக்கர வியூகம்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவரும், ‘ஃபேமிலி மேன் -2’, ‘ஆஃபிஸ்’ உள்ளிட்ட தொடர்களிலும், பல வெற்றிப் படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை – திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இவரின் கதை – திரைக்கதையில் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘சாந்தி நிலையம்’ தொடர் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், அவரின் 6 வயதான அக்கா மகளுக்கும் இடையில் நடைபெறும் பாச உணர்வினை அழகிய குடும்ப பின்னணியில் விவரித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக உருவாகிறது இப்படம்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.


