ஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் மிகவும் விரும்பப்படும்.
அந்த வகையில் இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான ‘களவாணி’ திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம்.
ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்குக் காரணமாகும். இப்போது அதே குழு இணைந்து ‘களவாணி-2’ படத்தை உருவாக்கியிருக்கிறது.
வர்மன்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சற்குணமே, இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.
விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
‘களவாணி 2’-வில் ஓவியாவின் கதாபாத்திரம் முந்தைய படங்களில் குறிப்பாக ‘90 ML’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சற்குணம்.
இந்த ‘களவாணி-2’-ம் பாகம் முற்றிலும் புதிய கதைக் களத்தையும், அனைத்து பொழுது போக்கு அம்சங்களுடன் கூடவே, அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓட்டு கேக்க வந்தாய்ங்களா’ பாடல் மிகவும் பிரபலமாகி இருப்பதால் படக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல அரசியல் கட்சிகள்கூட இப்போது தங்களது மேடைகளில் அந்தப் பாடலை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை விடுமுறையில் இந்தப் படத்தை வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன.
இத்திரைப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட இருக்கிறது.