ANJHANA MOVIES நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘கபடி ப்ரோ’.
இப்படத்தில் சிங்கம் புலி, சஞ்சய், வெள்ளங்கி மூவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் சுஜன், பிரியா லால், மதுசூதன ராவ், ஹானா, மனோபாலா, சண்முகசுந்தரம், ரஜினி, மீரா கிருஷ்ணன், அஞ்சலி, சிசர் மனோகர், சங்கர் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
எழுத்து, இயக்கம் – சதீஷ் ஜெயராமன், ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணசாமி, இசை – ஏ.ஜெ.டேனியல். படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமத், கலை இயக்கம் – ராகவாகுமார், பாடல்கள் – ஞானக்கரவேல், தாமரை, நடன இயக்கம் – நோபல், ராதிகா, ஒப்பனை – பிரசாத், உடைகள் – ரவீந்திரன், புகைப்படங்கள் – அன்பு, பத்திரிகை தொடர்பு – சிவக்குமார்.
இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் சதீஷ் ஜெயராமன், “”சிங்கம் புலி, சஞ்சய், வெள்ளங்கி மூவரும் பாயும் புலி எனும் கபடி அணியை வைத்து அந்தப் பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர். இந்நிலையில் வீரபாகுவும், அந்த ஊரின் காவல்துறை அதிகாரியான இசக்கி பாண்டியனின் மகள் அபிராமியும் காதல் கொள்கின்றனர்.
தன்னுடைய மாமா மகளை மணம் முடிப்பான் என்று வீட்டில் எதிர்பார்த்த நிலையில் நண்பனின் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து அபிராமியை மணக்க முற்படுகிறான்.
அவனது பித்தலாட்டங்கள் வெளியே தெரிய வர இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான். அபிராமியும் அவனை நம்ப மறுக்கிறாள். இசக்கி பாண்டியன் வீரபாகுவை தண்டிக்க கபடி போட்டியை தேர்ந்தெடுக்க அதில் நேர்மையை வெல்ல உறுதி கொள்கிறான். பின்பு நடந்தது என்ன ..? போட்டியிலும், காதலிலும் வீரபாகு வென்றானா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.” என்றார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது.