‘மனுநீதி’, ‘காசு இருக்கணும்’, ‘எங்க ராசி நல்லராசி’, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‘காதலி காணவில்லை.’
இதில் கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹார்த்திகா நடிக்கிறார். மற்றும் ஜி.ஆர். சோப்ராஜ், ரேகா, அபூர்வா உட்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – தயாள் ஓஷோ
இசை – ‘தேனிசை தென்றல்’ தேவா
பாடல்கள் – அண்ணாமலை, இளையகம்பன்.
கலை – கிஷ்ணாச்சாரி
நடனம் – ராஜு
எடிட்டிங் – தேவராஜ்
ஸ்டண்ட் – மாஸ் மாதா
தயாரிப்பு நிர்வாகம் – தாமஸ்
தயாரிப்பு – ஆர்.பி.பூரணி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி ராஜா
படம் பற்றி பேசிய இயக்குநர் ரவி ராஜா, “பீஷ்மா என்கிற இளைஞன் ஒரு அனாதை. ராவணன் என்கிற மந்திரி அவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனை ஒரு பெரிய ரவுடியாக வளர்த்து தன் மந்திரி பதவியை காப்பாற்றிக் கொண்டு அடுத்து முதலமைச்சராக வர துடிக்கிறான்.
பீஷ்மா தன்னை ஆளாக்கிய மந்திரிக்காக தன் உயிரையே கொடுக்க தயாராகிறான். இவர்களுக்கு இடையில் திவ்யா என்ற பெண் குறிக்கிட்டு பீஷ்மாவை காதலித்து ரவுடியாக இருந்தவனை மனிதனாக மாற்றுகிறாள். பீஷ்மா தன்னை விட்டு விலகி செல்வதை அறிந்த மந்திரி, திவ்யாவை கொலை செய்ய தயாராகிறான்.
சந்தர்ப்ப சூழ்நிலையில் திவ்யா, பீஷ்மாவை விட்டு வேறு ஒருவரை மணந்து கொள்ள, பீஷ்மா மறுபடியும் ரவுடியாக மாறுகிறான்.
ரவுடியாக மாறிய பீஷ்மா மந்திரியுடன் சேர்ந்து CBI ஆபிசரை கொலை செய்ய செல்லும்போது தன காதலியின் கணவன்தான் அந்த CBI ஆபீசர் என தெரிகிறது. சஞ்சலப்படும் பீஷ்மா தன் காதலியின் கணவனை, கொலை செய்தானா, இல்லையா என்பதுதான் திரைக்கதை…” என்றார் இயக்குநர்.









